தமிழ் வலைப்பூக்களில் அதிகமாகக் கணப்படும் சொல்லாடல் ''ஆப்பு''. இந்த ஆப்புவிற்கு உண்மையான விளக்கம் என்ன? அது எப்பொழுது, எப்படி ஏற்பட்டது என்ற விளக்கம் தெரிந்தவர்கள் கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
நன்றி.
Sunday, February 4, 2007
ஆப்பு என்றால் என்ன?
Posted by கேள்வியின் நாயகன் at 1:15 PM 1 comments
Wednesday, January 24, 2007
மலம் கழிக்க வெட்கப்படுவர், அதை மறைக்க வெட்கப்படாததேன்?
மனிதர்களுடன் சேர்ந்து வாழும் நாயோ அல்லது பூணையோ மலம் கழித்தால் அதை மறைப்பதற்கு தன்னால் ஆன முயற்சியை செய்கின்றது. ஆனால், இந்த மனிதனோ தன்னை மறைத்து, இந்த மலத்தை வெளிப்படுத்திவிட்டு அல்லவாச் செல்கின்றான்.
வெளிப்படுத்தப்பட்ட மலம், மனிதனுக்கு கேடு தராதா?
Posted by கேள்வியின் நாயகன் at 1:55 PM 2 comments
நடுத்தர மக்கள் பாவிகளானது ஏன்?
பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு அனைத்தையும் சாதிக்கின்றார்கள். அதைப் போல் ஏழைகள் அரசாங்கத்தின் இலவசத்தின் மூலம் தங்களின் தேவையை பூர்த்தி செய்துக் கொள்கின்றனர்.
ஆனால் இந்த நடுத்தர மக்கள்? இருந்தும் இல்லாதவர்கள். இருப்பதற்கு நல்ல வீடு உண்டு ஆனால் அதை பராமரிக்க பணமின்றி திண்டாடுகின்றனர். உழைப்பதற்கு முடியும் அதற்காண வேலையோ, தொழிலோ தொடங்க கையூட்டு கொடுக்கவோ அல்லது கையேந்தவோ முடியாமல் அல்லலுற்று அலுத்துப் போகின்றனர்.
இந்த நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு என்னதான் தீர்வு?
Posted by கேள்வியின் நாயகன் at 1:41 PM 0 comments
சுகாதாரம் எப்பொழுது?
நான் தமிழ்நாட்டில் அனேக இடங்களைச் சுற்றிப் பார்க்கும்பொழுது சுகாதாரம் 1% கூடப் பேணப்படாமலேயே உள்ளது. இதற்கு ஒரு தீர்வு எப்பொழுதுதான் ஏற்படும்?
இங்கு வலைத்தளங்களில் உலாவும் நமது சமூகச் சேவகர்கள் என்னத்திட்டம் வைத்துள்ளார்கள் என்பதை அறிய முடியுமா?
Posted by கேள்வியின் நாயகன் at 12:48 PM 2 comments